Thursday, January 10, 2019

கனவான்கள் போன்று செயற்பட்டால் மக்களுக்கு பணியாற்ற முடியாது. கிளிநொச்சி அரச ஊழியர்களுக்கு ஆளுனர்.

வட மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதன்போது கேட்டறிந்துகொண்டார். மேலும் வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அபிவிருத்திப்பணிகள், மற்றும் தேவைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

உயிரிழப்புக்கள் மற்றும் பாரிய அழிவுகளில் இருந்து, அனர்தத்திற்கு முகம் கொடுத்த மக்களை காப்பாற்ற உதவிய அனைவருக்கும் அவர் நன்றியை தெரிவித்தார். கிளிநொச்சிக்கான சவால்கள் இன்னும் தீர்ந்துவிடவில்லை. அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும். அத்தோடு எல்லாத் திணைக்கள அதிகாரிகளுக்குமிடையே ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பு இருக்கவேண்டும். ஒருவர் செய்கின்ற பணி இன்னொருவருக்கு தெரியாமற்போகிறது. இது கவலைக்குரியது என்றும் வருத்தம் தெரிவித்தார்.

கனவான்கள் போன்று இருந்தால் மக்களுக்கு பணியாற்ற முடியாது என்றும் இதன்போது குறிப்பிட்டார். மேலும் ஆளுநர் தலைமையிலான குழுவினர் பன்னங்கண்டி பிரதேசத்திற்கு சென்று அங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகளையும் ஆராய்ந்தனர்.

No comments:

Post a Comment