Tuesday, January 8, 2019

அர்ஜுனுக்கு வழங்கியதை, அரசியல் கைதிகளுக்கு ஏன் வழங்கவில்லை? - சார்ல்ஸ் நிர்மலநாதன்

தமது குடும்பத்தாரை பிரிந்து 11 மாதம் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட அர்ஜுன் ஆலோசியஸுக்கு பிணை வழங்கிய போது, தங்களின் மனைவி, மக்களை பிரிந்து வாழும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்கப்படவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

”அர்ஜுன் அலோசியஸ் குற்றமிழைத்தாரா? என்பது தொடர்பாகவோ அல்லது அவருக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்தோ? நான் எந்த கருத்தையும் தெரிவிக்க போவதில்லை.

ஆனால், அவருக்கு பிணை வழங்குவதற்கான சட்டத்தரணியின் வாதம் தொடர்பிலேயே தாம் கருத்து வெளியிடப்போவதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறினார்.மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிமோசடி குறித்த விசாரணைகளுக்காக அர்ஜுன் அலோசியஸ் 11 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தமது மனைவி,பிள்ளைகளை விட்டு பிரிந்திருப்பது குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த, அர்ஜுன் ஆலோசியஸ், தமது குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்று கோரிய பிணை மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், அர்ஜுன் ஆலோசியஸுக்கு பிணை வழங்கியதை நினைவூட்டிய சார்ல்ஸ் நிர்மலநாதன், 11 வருடங்களாக தமது மனைவி, பிள்ளைகளை பிரிந்து அரசியல் கைதிகளாக சிறையில் வாடுபவர்களுக்கு. ஏன் பிணை வழங்க முடியாது” என கேள்வி எழுப்பினார்.

வெகு விரைவில் தமிழ் அரசியல் அகிதிகள் விடயத்திற்கு சரியான தீர்வொன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே, தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாக அவர் கூறினார்.

அத்துடன் மக்களின் பிரச்சனைகளுக்கு முடிவு காண, தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் செயல்படும் எனவும்,தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கூறினார்.

எது எவ்வாறாயினும் இலங்கைக்கான சட்டத்தை இயற்றுகின்ற சபையின் உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு பயங்கரவாத தடுப்புச் சட்த்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை கிடையாது என்பது தெரியாமல் போனது எவ்வாறு?

சட்டத்தை இயற்றுவதற்கு அறிவு இல்லாவிட்டாலும் இருக்கின்ற சட்டத்தை வாசித்து அறிவதற்கேனும் அறிவு வேண்டும்.

No comments:

Post a Comment