Friday, January 11, 2019

எதிர்வரும் தேர்தலில் அதிக வாக்குகள் நமக்கே - காரணத்தை கூறினார் பந்துல

நடைபெறவுள்ள தேர்தலில் அதிக வாக்குகளை நாங்கள் நிச்சயம் பெறுவது உறுதி என்று நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனர்
நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை உள்ளடங்கிய பாரிய கூட்டணியொன்று, எதிர்வரும் தேர்தலுக்காக தோற்றம் பெறவுள்ளது. தனியார் ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த புதிய கூட்டணி தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் இக்கூட்டணிக்கு ஆதரவு வழங்கியுள்ளதுடன், ஏனைய சில கட்சிகளும் இணைவதற்கு தயாராக உள்ளதாக பந்துல குணவர்தன இதன்போது கூறினார், அரசாங்கத்தினால் மக்களின் வாக்குகளை பெறமுடியுமென்றால் விரைவாக தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுகின்றோமெனவும் அவர் மேலும் சவால் விடுத்தார் .

No comments:

Post a Comment