Thursday, January 10, 2019

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க எதிர்ப்புக் காட்டுகின்றார் ஐ.தே.கட்சியின் தயா கமகே

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் நாட்டை விரைவான அபிவிருத்தியினை நோக்கி கொண்டு செல்ல முடியும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என தொழில் தொழில் சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவுட்டல் அமைசச்ர் தயா கமகே கூறியுள்ளார்.

தனது தினைக்களத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அமைச்சிடம் ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பயன்படுத்தப்பட்டமையை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் அங்கு கூறுகையில், நாட்டின் அரசியல் யாப்பானது 19 முறை திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. திருத்தங்கள் மேற் கொள்ளப்படும் போது மக்களின் நலனை கருத்தில் கொள்ளுதல் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment