Tuesday, January 8, 2019

இரண்டு நிலைப்பாட்டில் அமைச்சர் சுஜீவ சேனசிங்க

அமைச்சர்களை நியமிப்பதில் எழுந்துள்ள குழப்பநிலைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தையே நாடுவோம் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த குழப்பநிலைக்கு உரிய தரப்பினர் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடுவதன் மூலமே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் இந்த பிரச்சினைக்கான தீர்வினை நீதிமன்றமே வழங்கவேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பினை பெற்றுக்கொள்ளும் நிலைபாட்டில் ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. ஆகவே நாட்டினது அபிவிருத்தியினை கருத்திற்கொண்டு அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முடியும்.

இருப்பினும், மறுபுறம் அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்கவேண்டுமானால் அமைச்சுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதே சிறந்தது என்றும் கருதுவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment