இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், இராணுவத்தினர் இரசாயன மற்றும் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை, பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
இறுதி யுத்தத்தின் போது ராணுவம், இரசாயன தாக்குதலை நடத்தவில்லை என்று தெரிவித்த பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது தரப்பு மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக தெரிவித்தார்.
இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டம் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கடந்த கால யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட வேண்டியது. இந்த குற்றச்சாட்டை தான் நிராகரிப்பதாக கூறிய ருவான் விஜேவர்தன, இது குறித்த ஆதாரங்கள் எவையும் இல்லையென கூறினார்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது. முப்படையினர் மனிதாபிமான அடிப்படையிலேயே செயல்பட்டமையை எல்லோரும் அறிந்திருப்பார்கள். எனினும் அந்த மனிதாபிமான பணியை பற்றி கருத்து தெரிவிக்காத பலர், இப்போது ராணுவதை பற்றி குறை கூறி வருவதாகவும், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment