Tuesday, January 8, 2019

இந்த நாடு பிளவுபட நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அனுர குமார.

மக்கள் விடுதலை முன்னணி அரசியலில் இருக்கும் வரை இந்நாடு பிளவு படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என அக்கட்சியின் தலைவர் தலைவர் அநுர குமார திஸாநாயக்க என கூறியுள்ளார்.

பொலநறுவையில் இடம்பெற்ற புத்திஜீவிகள் சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அங்கு பேசுகையில் :

நாம் 78ம் ஆண்டின் அரசியல் யாப்பினை மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் சிறுபாண்மையோரின் உரிமைகள் பாதுகாக்கும், அவர்களை அடையாளப்படுத்தும் புதிய யாப்பு முறைமை வேண்டும். இவ்வாறான யாப்பு ஒன்றிற்கு நாம் முன்னின்று ஆதரவளிப்போம்.

பெப்பரவரி 4ம் திகதி நாட்டை பிளவுபடுத்தும் யாப்பொன்று வரப் போகிறது என எல்லோரும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. நாம் மக்களிடம் உறுதியாக கூறுவது மக்கள் விடுதலை முன்னனி அரசியல் களத்தில் இருக்கும் வரை நாட்டை பிளவுபடுத்த விடமாட்டோம்.

ஜனாதிபதி முறை நீக்கம் தொடர்பாகவோ புதிய தேர்தல் தொடர்பாகவே அதிகார பிரிவு தொடர்பாகவோ எவ்வித முடிவும் இது வரை அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் முன்வைக்கப்படவில்லை. அரசியல் அமைப்பு சட்ட மூலத்தை முன்வைத்து பெரும்பான்மை பெற்றால் மட்டுமே அரசியலமைப்பு மாற்றப்படும். இல்லாவிட்டால் தோற்று போகும். அரசியல் அமைப்பொன்றை நடைமுறைப்படுத்த கிட்டதட்ட ஒருவருட காலமாவது தேவைப்படும்.

அண்மையில் மாத்தறையிலிருந்து பெலியத்தவரையில் 27 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை அமைத்தமை தொடர்பாக எல்லோராலும் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது. அதன் செலவு டொலர் பில்லியன் 270. அதேவேளை நாம் கடனுக்காக வருடமொன்றிற்கு டொலர் கோடி 590 ரூபாவை செலுத்துகின்றோம். நாம் அபிவிருத்தி என்று சொல்லிக் கொண்டு மேற்கொள்ளும் பாதைகள் கட்டிடங்கள் அனைத்தினதும் பின்புலத்தில் பாரிய கடன் சுமை காணப்படுகின்றது. இப்பாரிய கடனை சுமந்து கொண்டு தான் நாம் அவற்றையெல்லாம் அனுபவிக்கின்றோம்.

No comments:

Post a Comment