Tuesday, January 8, 2019

4 பேருக்கு உடனடி நியமனம் - அரசியல் அமைப்புச் சபை தீர்மானம்

இந்த வரத்திற்கான முதலாவது அரசியல் அமைப்புச் சபை கூட்டத்தில் 4 உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு சபை கூட்டம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியிருந்தது. இதன்போது உயர் நீதிமன்றத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை, அரசியலமைப்புச் சபையில் ஆராயப்பட்டது.

இதன்படி, உயர் நீதி மன்ற நீதிபதிகள் மூவரும், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment