Tuesday, January 8, 2019

பளையில் ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் பலி

கிளிநொச்சி பளை இயக்கச்சி பகுதியில் இன்று மாலை சம்பவித்த விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகியுள்ளனர். இராணுவத்தினரின் கனரக வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பளையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும், கட்டைக்காடு இராணுவ முகாமிலிருந்து இயக்கச்சி 552 படைப்பிரிவு முகாமிற்கு டீசல் அடிப்பதற்காக பயணித்த இராணுவத்தின் ட்ரக் வண்டியும், ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் பாரிய விபத்து சம்பவித்தது.

இந்த கோர விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பளை சேர்ந்த 36 வயதுடைய பி.ஜெயக்குமார், பளை மாசார் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கே. குகதாஸ், யாழ் - சுழிபுரம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய எஸ். ரதீஸ்வரன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளனனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பளை பொலீஸாரும் கிளிநொச்சி தடயவியல் பொலீஸாரும் மேற்கொண்டு வருகின்றனர் .

No comments:

Post a Comment