Friday, January 11, 2019

முன்னாள் புலிகள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இரண்டு பேருக்கு, வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தால் 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் நேற்று இந்த வழக்கின் பிரதிவாதிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்புப் படையின் 37 பேரை ஏவுகணை செலுத்தி கொலை செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டே இவர்கள மீது சுமத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை  ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோரே குறித்த குற்றத்தை புரிந்துள்ளார்கள். இந்த நிலையில், 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 வருடங்கள் கழிக்கும் வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்த அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தி தாக்கியதில், அதில் பயணித்த பாதுகாப்பு படையின் 37 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2000 ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட 37 குற்றங்கள் தொடர்பில் குறித்த இரண்டு பேருக்கும் 185 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக  நீதிமன்றம் அறிவித்தது.


No comments:

Post a Comment