Saturday, January 12, 2019

போதைப்பொருளை உண்டு வகுப்பறை மேசையில் மயங்கி கிடந்த 14 வயது மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாண மாணவர்கள் மூன்று மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி வடக்கு மீள்குடியேற்றப்பகுதிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர்கள் மூவரே, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க புரத்தில் உள்ள இரு மாணவர்களும் தெல்லிப்பழையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்று காலை பாடசாலைக்குள் 20 போதை மாத்திரைகளை கொண்டு சென்றுள்ளனர்.

அதில் ஒருவர் 5 மாத்திரையும் மற்ற மாணவன் 4 மாத்திரைகளையும் மூன்றாவது மாணவன் 3 மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளனர். பின்னர் வகுப்பறையினுள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

குறித்த விடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் தாறுமாறாக தம்மை அறியாமல் பேசத்தொடங்கியுள்ளனர். இதனை அடுத்து பாடசாலை அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாண காவல்துறையின் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment