Monday, January 7, 2019

பொதுஜன பெரமுன உறுப்பினருக்கு 11 வரை விளக்கமறியல்

கொழும்பு மாநகர சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் கே. ஜி. குலதிஸ்ஸ, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 28 திகதி தெமட்டகொட பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இவர் இன்று கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் இன்று புதுக்கடை இலக்கம் ஒன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை அமைதியின்மையுடன் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment