Saturday, January 12, 2019

சுவாமி விவேகானந்தரின் 117 ஆவது பிறந்ததினம் அனுஷ்ட்டிப்பு.

சுவாமி விவேகானந்தரின் 117 ஆவது பிறந்ததினம் இன்று அனுஷ்ட்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.வவுனியா நகர சபையின் உப தலைவர் சு.குமாரசாமியின் தலைமையில் வவுனியாவிலுள்ள விவேகானந்தரின் சிலைக்கருகில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சுவாமி விவேகானந்தரின் 117 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும், ன்றைய தினம் விசேட நிகழ்வுகளுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment