Friday, January 11, 2019

இன்று காலை 10 மணிக்கு பின் நடைபெறப்போவது என்ன?

புதிய அரசியல் அமைப்புச் சபை தொடர்பிலான நிபுணர்குழுவின் அறிக்கை இன்று முற்பகல்10 மணியளவில் கூடவுள்ள அரசியல் சபையில் முன்வைக்கப்படவுள்ளமை, மிக முக்கிய விடயங்களில் ஒன்றாகும். நாட்டின் பிரதமர், புதிய அரசியல் அமைப்பின் தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்கிரம சிங்க இந்த அறிக்கையை முன்னவைக்கவுள்ளார்.

புதிய யாப்பு தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க, அரசியல் வழிநடத்தல் குழுவினால் நிபுணர் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. குறித்த நிபுணத்துவ அறிக்கையின்படியே புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை தீர்மானிக்க முடியும்.


No comments:

Post a Comment