Saturday, December 1, 2018

தங்களது மூன்றரை வருட ஆட்சியில் எந்த பொலிஸாரும் கொல்லப்படவில்லையாம். ரஞ்சித் மத்துமபண்டா

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி மூன்றரை ஆண்டுகள் ஆட்சி நடைப்பெற்றது. ஆனால் இவ்வாறான பொலிஸ் அதிகாரிகளை சுட்டு படு கொலை செய்யும் அளவிற்கு ஆட்சி என ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரா பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

வவுனத்தீவு வீதி சோதனை சாவடியில் இருந்த பொலிஸார் இருவர் இனந்தெரியாத நபர்களால்சுட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

சுட்டு கொலை செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் தமிழர். இவர்கள் இருவரினதும் தூப்பாக்கிகளும் எடுத்து செல்லப்பட்டுள்ளது. ஒருவரின் கையும் வெட்டப்பட்டுள்ளது. இத்தகைய அசம்பவிதங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவில்லை. 2007 ம் ஆண்டில் 11 சிறுவர்கள்; காணாமல்போனது தொடர்பாக முதல் முறைப்பாடு செய்யப்பட்டது. அன்றை கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட இது தொடர்பாக விசாரனைகளை முன்னெடுத்தார். கடத்தப்பட்ட சிறுவர்கள் எல்.டி.டி.ஈ அல்ல கொழும்பிலுள்ள சிறுவர்கள் என கூறப்பட்டது. இச் சந்தர்ப்பத்திலேயே மேற்குறிப்பிட்ட தளபதியை ராஜபக்ஸ அரசாங்கத்தில் கைது செய்தனர்.

நாட்டில் மாவீரர் தினத்தை நடத்த விடமாட்டோம் என கூறினர். ஆனால் இன்று 38 இடங்களில் மாவீரர் தினம் நடைப்பெற்றது. ஆனால் இதற்கு பதில் சொல்ல அரசியலில் உள்ள எந்த தேரரும் முன்வரவில்லை என அவர் ராஜபக்ஸா-மைத்திரி ஆட்சியை வசைப்பாடினார்.

No comments:

Post a Comment