Monday, November 12, 2018

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் தூதுவர்களை வெளியேற்றுவீர். GSLF அரசிற்கு அழுத்தம்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் நாடுகள் தலையிடுவது ஐ.நா வின் 1965ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நாடுகளின் இறையாண்மையை அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு எதிரானதாகும் என்றும் அவ்வாறு தலையிடுகின்ற நாடுகளின் தூதுவர்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக நாடு கடத்தவேண்டும் என்றும் உலக இலங்கையர் பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பேரவையின் தலைவர் தலைவர் சுனில் சந்திரகுமார :

சர்வதேச நாடுகள் தலையிடும் அளவிற்கு இங்கு எவ்வித அரசியல் பிரச்சினைகளும் இங்கு ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளதுடன் பாராளுமன்றம் கூட்டுவது தொடர்பாக தலையிடுவது அவர்கள் உரிமையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com