Monday, November 5, 2018

வரலாற்றில் தாவிய ஒரே ஜனாதிபதி மைத்திரி!

வரலாற்றில் பொதுமக்களின் வாக்குகளைப் பெற்று மாற்றுக் கூட்டணிக்குத் தாவிய ஒரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டப் பிரதிநிதிகளை நேற்று (04) சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

ராஜபக்ச ஆட்சிக்கு எதிராகவே மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக பதவி அமர்த்தினர். எனினும், ஜனாதிபதி மீண்டும் ராஜபக்ச ஆட்சியைக் கொண்டுவந்துள்ளார். இது மக்களுக்கு செய்த துரோகம்'' என்று பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்தத் தீர்மானம் 19ஆவது அரசியலமைப்பிற்கு அமைய 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment