Sunday, November 4, 2018

கிளிநொச்சியில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலையில் நாடுபூராகவும் பல்வேறுபட்ட தரப்பினர், ஆட்சி மாற்றத்தினை எதிர்த்தும் ஆதரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் இன்று கிளிநொச்சியில் ஐதேகவின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற ஜனநாயகம் மீறியதாக தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இன்று மதியம் பன்னிரண்டு மணியளவில் கிளிநொச்சி கண்ணன் கோவில் முன்பாக ஆரம்பித்த எதிர்ப்புக் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்றது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் "மீறாதே மீறாதே பாராளுமன்ற ஜனநாயகத்தை மீறாதே" எனும் கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். அத்தோடு மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான கோசங்களையும் ஏழுப்பியவாறும் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.




No comments:

Post a Comment