Wednesday, November 7, 2018

கோத்தபாயவின் வாகனம் விபத்து. தம்பதியினர் எவ்வித சேதமுமின்றி தப்பியுள்ளனர். சாரதி கைது.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை, மெதமுலவிலுள்ள அவர்களது பூர்வீக இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த வாகம் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இருவரும் எவ்வித சேதம் இன்றி தப்பியுள்ளனர்.

காலி மாவட்டத்தின் ஹக்மன தெனகம என்ற இடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த லான்ட் மாஸ்டருடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. லாண்ட மாஸ்டருடன் மோதிய ஜீப் வண்டி பாதையிலிருந்து விலகி மரத்துடன் மோதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான லாண்ட் மாஸ்ரரின் சாரதி காயமடைந்த நிலையில் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கோத்தபாயவின் வாகனச் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தந்தையான அமரர் டீ.ஏ. ராஜபக்சவின் சிராத்த தினத்தை முன்னிட்டு, பௌத்த பிக்குகளுக்கு அவர்களது இல்லத்தில் தானம் வழங்குவதற்காக சென்றுகொண்டிருந்தபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்திற்குள்ளான ஜீப் வண்டி மற்றும் லாண்ட மாஸ்ரர் ஆகியவற்றை மேலதிக விசாரணைக்காக பொலிஸார் கையகப்படுத்தியதையடுத்து , பிறிதொரு வாகனத்தை வரவழைத்துக்கொண்டு தனது பயணத்தை தொடர்ந்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச.

No comments:

Post a Comment