Thursday, November 29, 2018

நாட்டு மக்களிடம் மைத்திரிபால பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும். விமல் ரத்நாயக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், தற்போதைய அரசாங்கத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள போவதில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மைத்திரி - மகிந்த சூழ்ச்சி திட்டத்தை தோற்கடிப்பதாக நாங்கள் கூறினோம்.

மேற்குலக நாடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்தாலும் மாலைத்தீவு, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகள் கூட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை அங்கீகரிக்கவில்லை. கறுப்பு ஊடகங்கள் நாட்டை ஆட்சி செய்கின்றன.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு மர முந்திரி பருப்புக்களை விநியோகிக்கும் நபரை விரட்டவும் ஒஸ்ரியாவின் தூதுவரை பதவி நீக்கவுமே ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவது புற்றுநோயாக மாறியுள்ளது. மற்றுமொருவர் கட்சி தாவ தயாராக இருப்பதாக தெரிகிறது.

அவரது பாட்டனார் கங்காருவா? ஜனாதிபதி இரண்டாவது முறையாகவும் தேர்தலில் போட்டியிட மேற்கொண்ட சூழ்ச்சியால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்துவாரா? கட்சி தாவாமல் இருக்க பணத்தை பெற்றனரோ தெரியவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போது குமார வெல்கம போன்ற ஒருவர் தேவை” எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment