Sunday, November 11, 2018

சிங்களக் கட்சிகளுடன் கூட்டுச்சேரவே மாட்டாராம் டக்ளஸ்!

ஈபிடிபி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிங்கள கட்சிகளுடன் கூட்டு வைக்காது என்றும் அது தனது வீணையிலேயே போட்டியிடும் என்றும் அதன் தலைவர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் தேர்தலில் மக்கள் தங்களுக்கு போதிய ஆணையை தந்தால் 13 திருத்தத்தின் ஊடான அரசியல் தீர்வுக்கு மத்திய அரசிற்கு அவர் அழுத்தம் கொடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈபிடிபி கூட்டிலிருந்து வெளியேறுமா என்பது தொடர்பில் அவர் வெளிப்படையாக இதுவரை எக்கருத்தும் கூறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், வடகிழக்கில் கூட்டு ஒன்றினை அமைப்பதற்கு டக்ளஸ் மேற்கொண்டிருந்த முயற்சிகள் தோல்விகண்டுள்ளது என்றும், அதற்கான காரணம் ஈபிஆர்எல்எப் இன் வரதரணியினர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவதற்கே பெரிதும் நாட்டம் காட்டி வருகின்றனர் என்றும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment