Sunday, November 11, 2018

எல்லா நாம்பனும் ஓடுதென வாலைக்கிளப்பிக்கொண்டு ஓடத்தொடங்கும் வயிற்று நாம்பன் றிசார்ட்.

எல்லா நாம்பனும் ஓடுது என்று வயிற்று நாம்பன் குட்டியும் வாலைக்கிளப்பிக்கொண்டு ஓடுதாம் என்ற ஓர் நகைப்பு உண்டு. அவ்வாறான நகைப்புக்கு உள்ளாகியுள்ளார் றிசார் பதுயுதீன். நாட்டில் அரசியல் நிலைமைகள் மோசமடைந்தபோது, பாராளுமன்றில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதிருக்கும் நோக்கில் மஹிந்தவின் பணத்தை பெற்றுக்கொண்டு உம்ராவுக்கு சென்றிருந்த றிசார்ட், பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடையவர்களாகவும், பணத்திற்கு விலைபோகாதவர்களாகவும் இருந்திருந்தால், நாடு மோசமான அரசியல் சூழ்சிகளுக்குள் தள்ளப்பட்டிருந்தவேளை நாட்டிலிருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது பெருவாரியானவர்களின் நிலைப்பாடாகும்.

No comments:

Post a Comment