Sunday, November 18, 2018

ஜனாதிபதி – ரணில் சந்திப்பு ஆரம்பமானது. சபாநாயகர் – ஜேவிபி பகிஸ்கரிப்பு

பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் திட்டமிடப்பட்ட சந்திப்பு சற்று முன்னர் ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ள இச்சந்திப்பில் மஹிந்த ராஜபக்ச , ரணில் விக்கிரமசிங்க உட்பட்ட கட்சித் தலைவர்களுடன் பல கட்சிகளின் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ள அதேநேரம் குறித்த சந்திப்பினை சபாநாயகர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் பகிஸ்கரித்துள்ளனர்.

No comments:

Post a Comment