Sunday, November 11, 2018

மஹிந்தரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறினார். தாமரை மொட்டு.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர்களில் ஒருவரான மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (11) காலை 11 மணியளவில் விஜேராமயில் உள்ள பிரதமரின் இல்லத்தில் வைத்து அவர் அங்கத்துவத்தை பெற்றுகொண்டுள்ளார். மஹிந்தவை தொடர்ந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் கை மேலோங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment