Thursday, November 8, 2018

நாங்கள் மஹிந்தவிற்கோ ரணிலுக்கோ ஆதரவில்லை. ஆனால் ஜனநாயகத்திற்காக போராடுவோம். விஜித ஹேரத்

நாம் பக்க சார்பும் இல்லை மகிந்தவிற்கு ஆதரவும் இல்லை என மக்கள் விடுதலை முன்னனி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பெலவத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து பேசுகையில் :

நாட்டில் நடைபெறும் ஆட்சி சூதில் பிரதமர் ஆவதற்கு ரணிலுக்கோ மகிந்தவிற்கோ ஆதரவு அளிக்க போவது இல்லை.

ஜனநாயகத்தை காக்க பாராளுமன்றத்தினுள்ளும் வெளியேயும் நாம் போராடுவோம்.

ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக இனம், மதம், மொழி, அரசியல் முரண்பாடுகள் அத்தனையும் கடந்து பலமிக்க மக்கள் கூட்டத்தினை ஒன்றினைத்து போராடுவோம்.

ஜனவரி 8 ம் திகதி ஆதரவு அளித்த மக்களின் அபிலாஷைகள் தூக்கி எறியப்பட்டன. சுபீட்சமான அரசாங்கத்தை எதிர்பார்த்த மக்களுக்கு கிடைத்து ஏமாற்றமே.

இந்நிலையில் தற்போதைய பிரதமரின் நியமனமானது, அரசியல் யாப்பிற்கும், அரசியல் கலாச்சாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் முற்றிலும் முரணாகும்.

ஜனாதிபதியின் தனிப்பட்ட தீர்மானத்தின் படி நியமிக்கப்பட்ட பிரதமரையோ அமைச்சர்களையோ நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள போவது இல்லை.

இன்று கோடிகணக்கான பணத்திற்கு அமைச்சர்கள் விலைப்பேசப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment