Friday, November 23, 2018

சிறைச்சாலையிலிருந்து மாயமாகிய போதைப்பொருள் பிரபலம். தலையை பிய்கின்றனர் சிறை அதிகாரிகள்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்ர்டைய பிரதான சந்தேக இருதினங்களுக்கு முன்னர் தலைமறைவாகியுள்ளார். இந்நபர் எவ்வாறு தப்பித்திருப்பார் என்பது தொடர்பாக அதிகாரிகளால் ஊகிக்க முடியாதுள்ளது.

சந்தேக நபர் மதுகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் அழைத்து வரும் வேளையில் இவ்வாறு தலைமறைவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இச்சந்தேக நபர் போதைப் பொருட்கள் கடத்தலில் முக்கிய பிரமுகர்களான சுசேவ், சித்திக் ஆகியோரது பிரதான விநியோகஸ்தராக செயற்படும் நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆறு மாத்திற்கு முதல் 2கோடி பெறுமதியான ஹெரோயின் 2கிலோ வைத்திருநத குற்றச்சாட்டில் ஹொரனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். களுத்தறை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் போதே தப்பித்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

No comments:

Post a Comment