Tuesday, November 6, 2018

ராஜபக்ஷ ஆட்சி காலத்து குற்றங்களுக்கான ஆவணங்களை மறைக்கும் முயற்சியாம்! ஆஜித் பி பெரேரா

அரசியல் யாப்பிற்கு முரணாக பிரதமராக பதவி ஏற்றதோடு, ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நடைப்பெற்ற குற்றங்களுக்கான சட்ட ரீதியான ஆவணங்கள் மறைக்கப்படும் ஆபத்தான நிலை உருவாகி உள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் அஜித் பி பிரசன்ன தெரிவித்துள்ளார்.

இக்குற்றங்களை விசாரிக்கும் அரசின் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும், ஏனைய நீதி துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் விஷேட அதிரடிப்படை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டதாக அமைச்சர் அஜித் பீ பெரேரா , அலரி மாளிகையில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், பிரஜைகள் இறைமையினை பாதுகாக்கும் நிறுவனத்திற்கு இத்தகைய நிலை உருவாகி உள்ளமையானது பிரஜைகளின் உரிமைகளுக்கு சவாலாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

அத்தோடு, ராஜபக்ஷ ஆட்சி கால குற்றங்களுக்கான ஆவணங்கள் மறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு எதுவும் நடைப்பெற்றாமல் இருக்க குற்றவியல் விசாரனை குழுவிற்கும் அதிகாரிகளுக்கும் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொலிஷ் மா அதிபர்க்கு வேண்டுகோள் விடுத்தார்.

தக்க பாதுகாப்பு வழங்க விடின் நாட்டின் ஜனநாயகத்தின் மீது உள்ள கடைசி நம்பிக்காயும் இழக்க நேரிடும் என அமைச்சர் அவர்கள் கூறினார்

No comments:

Post a Comment