பிரதமாராக மகிந்த ராஜபக்ஸ அவர்களை ஏற்றுக்கொள்ளாவிடின் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒருமுறை எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என மிக உறுதியாக பிரசன்ன ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஸ அவர்களை பிரதமராக ஏற்றுகொள்ள தவறும் பட்சத்தில் சபாநாயகர் அவர்கள் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கடும் எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் முறையான நம்பிக்கையில்லா பிரேரணை முன் வைத்தால் அதற்கு முகம் கொடுக்க தம்முடைய கட்சி தயார் எனவும் அவ்வாறின்றி சபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சியின் கைப்பொம்மையாக செயற்படுவாராயின் எமது உச்சக்கட்ட எதிர்ப்புக்கு முகம் கொடுக்க நேரிடும் என கருத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment