Thursday, November 1, 2018

ரணில் - கோத்தா அலரி மாளிகையில் சந்திப்பு – நாளை வெளியேறலாம்.

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இன்று பிற்பகல் அலரி மாளிகையில் சந்தித்துபேசியுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்கரமசிங்கவின் பாதுகாப்பு மற்றும் அவர் அலரி மாளிகையிலிருந்து விலகிச் செல்வதானால் அதற்குரிய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக அறிய முடிகின்றது.

பெரும்பாலும் நாளை ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அலரி மாளிகையிலிருந்து வெளியேறலாம் என அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றது.

No comments:

Post a Comment