Friday, November 9, 2018

விக்கியின் நிலைமை மோசமடைகின்றது. உயர் நீதிமன்றும் கைவிரித்தது.

வடக்கு போக்குவரத்து அமைச்சராக இருந்த பா.டெனீஸ்வரன், முன்னாள் முதலைமைச்சர் விக்கினேஸ்வரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தன்னை பதவி நீக்கம் செய்தது தவறானது என டெனீஸ்வரன் நீதிமன்று சென்றிருந்தார். அவரது மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்று பதவி நீக்கம் செய்யப்பட்டது தவறு என்றும் டெனீஸ்வரன் அமைச்சராக தொடர்ந்தும் செயலாற்றலாம் என்றும் தீர்ப்பளித்தது.

மேற்படி தீர்ப்புக்கு எதிராக விக்கினேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். விக்கினேஸ்வரனின் மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தீர்ப்பு சரியானது என நேற்று நிராகரித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தன்னை அமைச்சராக செயற்படவிடாது, நீதிமன்றை அவமதிக்கின்றார் என்று டெனீஸ்வரன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவ்வழக்க எதிர்வரும் 10 ம் திகதி விசாரணைக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment