Sunday, November 11, 2018

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கையை விரித்த மஹிந்த தேசப்பிரிய.

ஜனாதிபதியால் பாராளுமன்று கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது தொடர்பாக கலந்துரையாட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் நேற்று தேர்தல் கொமிஷன் சபை க்கு சென்று ஆணையக தலைவர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பின்போது, தேர்தல் அறிவித்தல் அரசியலமைப்பிற்கு முரணானது என அவர்கள் கூற, தேர்தல் அறிவித்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்வது எனது வேலை இல்லை எனவும், உங்கள் அனைவருக்கும் தேர்தல் தொடர்பாக முறைப்பாடு காணப்படுமாயின் உயர் நீதிமன்றத்தினை நாடுவது உசிதம் என தான் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வேளை யாரேனும் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து தீர்ப்பு வருமாயின் அதன் படி செயற்பட தான் தயங்க போவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த தேசப்பிரியவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சட்டதரனி அஜித் ஜீ பெரேரா, அரசியல் அமைப்பிற்கு புறம்பாக தேர்தல் நடாத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்ற கருத்தை தாம் தேர்தல் கொமிஷன் சபைக்கு தெரித்ததாகவும் அதற்கு அச்சபை தங்கள் கருத்துக்களை செவிமடுத்தனர் எனவும் தெரிவித்தார்.

இத்தேர்தல் அறிவித்தல் தொடர்பாக தேர்தல் கொமிஷன் சபை ஏதேனும் கருத்து தெரிவித்ததா? என்ற கேள்வியை ஊடகவியலாளர்கள் தொடுத்தபோது, „அது தொடர்பாக கருத்து வெளியிட முடியாது' எனக் கூறினார் அஜித் பி பெரேரா.

ராதித சோனாரத்ன, பாடலி ஷம்பிக ரனவக, கயந்த கருனாதிலக, அகில விராஜ் காரிய வசம், பேராசிரியர் வறர்ஷத சில்வா, வறிருனிக பிரேமசந்திர ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment