Sunday, November 18, 2018

முடிவுகள் இன்றி முடிவுற்றது சந்திப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்த நிலை தொடர்பில் ஓர் தீர்வினை காணும் பொருட்டு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு எவ்வித தீர்வும் எட்டப்படாமல் முடிவுற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

ஜேவிவி மற்றும் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டிருந்த குறித்த சந்திப்பில் ரணில் விக்கரமசிங்க , மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி தலைமையில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ரணில் விக்கரமசிங்கவை எக்காரணம் கொண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என மைத்திரிபாலவும், ரணில் தான் பிரதமர் என ஐக்கிய தேசியக் கட்சியும் விடாப்பிடியாகவுள்ளனர். ஆனால் இதன் சுமைகளை மக்கள் சுமக்க வேண்டியவர்களாக மாறியுள்ளனர். மக்கள் மீது அக்கறையுள்ள தலைமைகளாக இருந்தால் பரஸ்பர விட்டுக்கொடுப்புக்கு தயாராவேண்டும் என மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்:


No comments:

Post a Comment