Saturday, November 10, 2018

நாமல் ரெடியாம், தமிழர் தான் ரெடியில்லையாம்.

தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராகவுள்ளோம் ஆனால் துரதிஸ்டவசமாக அவர்கள் தங்கள் சொந்த சமூகத்துடனேயே சேர்ந்து செயற்படவில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடேயின் கீதா மோகனிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் கட்சிகள் தங்கள் நலனை மையமாக வைத்தே செயற்படுகின்றன அவர்கள் மக்களின் நலன் குறித்த அக்கறையுடன் செயற்படவில்லை.

பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் தங்கள் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச சீனாவிற்கு நெருக்கமானவர் என இந்தியா கருதுவது குறிப்பிடுகையில் :

நாங்கள் சிறந்த எதிர்காலத்தையே எதிர்பார்க்கின்றோம், நாங்கள் வலுவான இந்திய இலங்கை உறவுகளை விரும்புகின்றோம் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச, நாங்கள் அயலவர்கள் இன்றைய உலகில் பொருளாதார உறவுகளே முக்கியமானது சீனாவுடான எங்கள் உறவுகள் முற்றுமுழுதாக முதலீடுகளை அடிப்படையாக கொண்டவை எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment