Thursday, November 29, 2018

பொதுத் தேர்தலை நடாத்துவீர். கிளிநொச்சியில் மக்கள் பேரணி

நாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த சூழ்நிலையில் பொதுத்தேர்தல் தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையில் இழுபறிநிலை காணப்படும்போது, பொதுத்தேர்தலை நடத்துமாறு வலுயுறுத்தி மகிந்த கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இன்று காலை பத்து முப்பது மணிக்கு கிளிநொச்சி காக்கா கடை சந்தியிலிருந்து டிப்போச் சந்திவரை பேரணியாகச் சென்ற மக்கள், பொதுத் தேர்தலை நடத்து, சபாநாயகரே பதவி விலகு, வேண்டும் வேண்டும் மகிந்த வேண்டும், ரணிலே வெளியேறு போன்ற கோசங்களை எழுப்பினர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் இருந்து கலந்து கொண்ட மக்களுடன், வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தர்மபால செனவிரத்ன உள்ளிட்டோரும் இப்பேரணியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





No comments:

Post a Comment