Thursday, November 15, 2018

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள். தமிழீழத்திற்கு ரணில் தயார்! விஜயகலா.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதம மந்திரியாக்கினால் அவர் சுயாட்சியை தருவதற்கு தயாராக இருப்பதாக யாழ் மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இந்திய த ஹிந்து நாளேடுக்கு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நாடு அரசியல் ரீதியாக அசமந்த நிலையை அடைந்துள்ள நிலையில், மேற்படி கருத்து தென்னிலங்கை இனவாதிகளுக்கு தீனியாக மாறியுள்ளதுடன், சிங்களப்பத்திரிகைகள் இது தொடர்பில் பெரிதும் சாடியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் முறை பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தால் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment