Thursday, November 15, 2018

நாளை மீண்டும் கூடுகின்றது பாராளுமன்று.

இன்று கூடிய பாரளுமன்று அமளிதுமளியுடன் நிறைவு பெற்றதுடன் எதிர்வரும் 21 திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பினைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை நாளை பிற்பகல் 1.30 இற்கு கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் ஊடகப் பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment