Monday, November 26, 2018

யுத்தத்திற்கு உதவி வழங்கியதுபோல், நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் உதவி வழங்குங்கள். மகிந்தவின் விசேட கோரிக்கை.

நேற்று பிற்பகல் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ச.

அந்த உரையின் முழுவடிவம் வருமாறு :

நான் கடந்த 15ம் திகதியில் உரையாற்றிய பொழுது சகல கட்சியினரிடமும் கேட்டு கொண்டது பொதுதோர்தல் ஒன்றிற்கு நாம் முகம் கொடுக்க தயாராவோம் என்றே. மக்கள் விடுதலை முன்னனி இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போதும் ஜ.தே.கட்சியினர் ஜனாதிபதி தேர்தலுக்கே திட்டம் தீட்டுகின்றார்கள். சகல அரசியல் சூழ்நிலையிலும் மையமாக விளங்குவது பாராளுமன்றமே.

2015ம் ஒகஸ்ட் மாதம் நடைப்பெற்ற பொதுத்தேர்தலின் போது எந்த கட்சியும் பெரும்பாண்மையை பெற்றிருக்கவில்லை. ஜ.தே.கட்சி 106 ஆசனங்களையும் ஸ்ரீ.சு.கட்சி 96 ஆசனங்களையும் பெற்றிருந்தனர். இதன் போது ஜ.தே.கட்சியினர் ஸ்ரீ.ல.சு கட்சியுடன் இணைந்தே ஆட்சி அமைத்துக்கொண்டனர்.

கடந்த ஒக்டேபார் 26ம் திகதியில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்திலிருந்து விலகி கொண்டனர். அதிலும் ஐக்கிய தேசிய முன்னணியினர் கட்சியின் சில அமைச்சர்கள் எம்முடன் இணைந்து கொண்டனர். இலங்கை அரசியல் வரலாற்றின் சில விடயங்களை நான் கூற விரும்புகின்றேன். அக்காலத்தில் ஜனாதிபதிகளாக விருந்த டீ.எம்.விஜயதுங்க மற்றும் சந்திரிக்கா அம்மையார் ஆகியோர் அரசாங்கம் அமைக்கும் போது பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை பெற்ற கட்சியுடன் இணைந்தே ஆட்சி அமைத்தனர். அவ்வகையில் 1994ம் ஆண்டு பொது பெரமுன உடனும் 2001ம் ஆண்டு ஐ.தே.கட்சியுடனும் 2004ம் ஆண்டு ஸ்ரீ.ல.சு.கட்சியுடனும் இணைந்தே ஆட்சி அமைத்தனர். ஜனாதிபதி அவர்களும் அவ்வாறே செயற்பட்டார்.

கடந்த 26ம் திகதி எமது அரசாங்கம் பொறுப்பேற்ற போதும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி நாம் காபந்து அரசாங்கமாக் செயற்படுகிறோம். நாட்டின் இறைமையை காக்கவே பொது தேர்தல் ஒன்று வேண்டும் என்றோம். ஆனாலும் ஏனைய பா.உறுப்பினர்கள் முன்னைய அரசாங்கத்தையே விரும்புகின்றனர்.

நான் இவ்வாறான உரையை ஆற்றுவதற்கான காரணம் என்னிடம் சிலர் எழுப்பிய கேள்வியினாலே. பொது தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்களே இருக்கும் நிலையில் திடிரென அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டது ஏன்? இது தொடர்பாக ஜ.தே.கட்சியினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்..

இதற்கு விளக்கமளிப்பது எனது கடமையாகும். ஜனாதிபதி ஜ.தே.கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீதான அதிருப்தியின் காரணமாக அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கூறிய போது நாம் எவ்வாறு மறுப்பது?
நாட்டின் எதிர்காலம் கருதியே அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படைத்தார். நாட்டின் இன்றைய சூழ்நிலையில் சிந்திக்க வேண்டியது அதிகார போட்டியை அல்ல. நாட்டின் இனம் மற்றும் நாளைய தலைமுறையினரின் தலைவிதியை மட்டுமே.

நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் முன்னால் நிதியமைச்சர் கூறுகையில் அரசாங்க மாற்றமானது பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். முன்னைய அரசாங்கத்தின் ஸ்திரமற்ற பொருளாதார நிலை காரணமாகவே ஆட்சியை எமக்கு ஒப்படைத்தார். ஜனாதிபதி அவர்கள் எம்மமுடன் இணைந்து செயற்படுகையில் நாம் எவ்வாறு நிதிநிலமைகளை சமநிலையில் வைத்திருந்தோம் என அறிந்திருந்தார். யுத்த காலத்தில் கூட நாம் ஒரு போதும் நிதி நெருக்கடியை சந்தித்தது இல்லை. 2007ம் ஆண்டு உலக உணவு பஞ்சத்தினை எம்மக்களை நாம் அனுபவிக்கவிடவில்லை. 2008ம் ஆண்டு காலப்பகுதியில் உலகத்துக்கே பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும் கூட எம் மக்களின் பொருளாதார நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.


பிரச்சினை பாராளுமன்றத்திலேயே காணப்படுகின்றது. ஆகவே, தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த வேண்டிய எவ்விதத் தேவையும் இல்லை. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சியும் தௌிவான பெரும்பான்மையைப் பெறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 96 ஆசனங்களைப் பெற்றது. இரு கட்சிகளுக்கும் இடையில் 10 ஆசனங்களே வித்தியாசப்பட்டன. ஆகவே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்றுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமையவே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழு அரசாங்கத்தில் இருந்து வௌியேறியது. அதன்பின்னர், ஐக்கிய ​தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களும் எம்முடன் இணைந்துகொண்டனர்.

ஆகவே, இன்று பாராளுமன்றத்தில் உள்ள மிகப்பெரிய குழுவுக்கே நான் தலைமைத்துவம் வழங்குகிறேன். 1994, 2001, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் பின்னர் ஜனாதிபதியாக இருந்த டி.பி. விஜேதுங்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் அதிகூடிய உறுப்பினர்கள் கொண்ட குழுவையே ஆட்சியமைக்க அழைத்தனர். அதன்படி 1994 ஆம் ஆண்டு பொதுஜன முன்னணியும் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய ​தேசியக் கட்சியும் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் ஆட்சி அமைத்தன. தற்போது உயர்நீதிமன்ற நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தல் நிறைவடையும் வரையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மாத்திரமே கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு நாட்டில் யுத்தம் ஆரம்பமானபோது பொதுமக்கள், தொழிற்சங்கங்கள், நுகர்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் யுத்தத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட்டனர். அந்த ஒத்துழைப்பின் காரணமாகவே எவராலும் முடிவுக்குக் கொண்டுவரமுடியாத யுத்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவந்தோம். ஆகவே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக யுத்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பைப் போன்று ஒத்துழைப்பு வழங்குமாறு நான் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமான இறுதி சந்தரப்பம் இதுவாகும். இந்த முயற்சியில் தவறிழைக்கப்பட்டால் கிரேக்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே எமது நாட்டிற்கும் ஏற்படும். நாட்டில் தற்போது பொருளாதார இடர்நிலைமை ஏற்பட்டுள்ளதாக கருதியே செயற்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்கள் மீது அதிக வரியை சுமத்தி அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து வௌிநாட்டு பயணங்களுக்கு அதிக பணத்தை செலவு செய்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் அதிகாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியுமான வகையில் குறிப்பிடத்தக்க அமைச்சர்களை நாம் நியமிப்போம். அதனை நான் முன்கூட்டியே கூறுகின்றேன். இவை அனைத்துக்கும் முன்பாக நாட்டில் நிலையான அரசாங்கமொன்று இருக்க வேண்டும். அந்த புதிய அரசாங்கத்தில் செலவுகளைக் குறைப்பதற்கு இயன்றளவு நடவடிக்கைகளை எடுப்பேன். மூடிஸ் நிறுவனத்தினால் எமது கடன் தரப்படுத்தல் கீழ் மட்டத்தில் உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறு செய்யாவிட்டாலே புதுமையானது. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் அரசாங்கத்தை கையளிக்கும்போது அவையனைத்தும் தரப்படுத்தலில் உயர்மட்டத்திலேயே காணப்பட்டன. 2015 ஆம் ஆண்டின் பின்னரே அது வீழ்ச்சியடைந்தது.

இந்தத் தரப்படுத்தலில் அரசியலும் கூற வேண்டும். 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் கடன் தரப்படுத்தில் உயர் மட்டத்திற்கு கொண்டுசெல்ல வேண்டி இருந்தபோதிலும், அவர்கள் எம்மை கீழ் மட்டத்திற்கு கொண்டு சென்றனர். எனினும், வர்த்தகசந்தை தொடர்பில் எமக்கு இருந்த நம்பிக்கை காரணமாக நாம் அதனை ஐந்து சதத்திற்கு கவனத்திற் கொள்ளவில்லை. அவ்வாறான சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதினாலேயே ஜனாதிபதி நாட்டை எம்மிடம் கையளித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு இது குறித்து தெரியும் என்பதினாலேயே தினமும் வௌிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் தூதுவர்களை அழைத்து பொதுத் தேர்தலை நடாத்துவது ஜனநாயக விரோதமான செயற்பாடு என சர்வதேசத்திற்கு பிரசாரம் செய்கின்றனர். பொதுத் தேர்தல் நடைபெற்று எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஜனாதிபதியும் நாமும் இணைந்து உருவாக்கும் அரசாங்கம் மிகவும் பலம் வாய்ந்தது. அது மக்கள் சார்ந்த அரசாங்கம் என்பதை கூறுகின்றேன். நாட்டின் ஸ்திரத் தன்மையை உருவாக்குவதற்காக நடாத்தவிருந்த பொதுத்தேர்தல் பிற்போட்டுள்ளமையால் ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை உருவாக்க சிறிது காலம் செல்லும். ஆகவே, இந்த காலத்தில் எம்முடன் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

2006 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளாத வகையில் நாம் செயற்பட்டோம் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி நாம் ஆரம்பித்த இந்தப் பயணத்தின் ஊடாக எரிபொருளின் விலையையும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையையும் குறைத்து உரமானியத்தை வழங்கி விவசாயத்தை மேம்படுத்துவதற்கு செயற்படுகின்றோம். 2015 ஆம் ஆண்டு உண்பதற்கும் அணிவதற்கும் மக்கள் ஆட்சி மாற்றத்தை உருவாக்கவில்லை என முன்னாள் அமைச்சரவைப் பேச்சாளர் எத்தனை தடவை கூறியிருப்பார். ஜனநாயகத்தை உருவாக்குவதற்காகவே ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தியதாக அவர் கூறினார். எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் மக்களுக்கு ஜனநாயகம் கிடைக்கவில்லை. வாக்களிக்கும் உரிமை கிடைக்கவில்லை. உண்பதற்கும் அணிவதற்கும் கிடைக்கவில்லை. அதுவல்லவா இடம்பெற்றது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இருக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும். தேர்தலை நடாத்தாமல் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்துகொண்டு நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டுசெல்லும் சக்திகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடித்து, இந்த நாட்டை சரியான பாதைக்குக் கொண்டுசெல்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

No comments:

Post a Comment