Friday, November 2, 2018

பாதுகாப்பு பிரதானியை கைது செய்யுமாறு நீதிமன்று உத்தரவு.

11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் கமான்டர் சந்தன பிரசாத் எனப்படும் நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தாரென, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்யுமாறு, கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று (02), உத்தரவிட்டுள்ளார்.

ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதற்கு முன்னர் அவரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் வங்கி கணக்கிலிருந்து நேவி சம்பத்திற்கு பணம் பரிமாறப்பட்டுள்ள விடயம் தொடர்பிலும், ரவீந்திர விஜேகுணவர்த்தன மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment