Wednesday, November 28, 2018

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது!

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை எதிர்வரும் டிசம்பர் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கு விவகாரத்தில் இன்று அவர் மன்றில் ஆஜரானபோதே விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அட்மிரல் விஜயகுணவர்த்தன தனக்கு எதிராக சாட்சியம் அளித்த கடற்படையின் அதிகாரி ஒருவரை மிரட்டியதுடன் அவரை கொலை செய்ய முயற்சித்தார் என்ற புதியதோர் குற்றச்சாட்டுக்கும் உட்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

Post a Comment