Wednesday, November 21, 2018

தனது பேத்தியின் ஆடையினுள் வைத்து ஹெரோயின் கடத்த முயன்ற பாட்டியுடன் இருவர் கைது.

அம்பலாங்கொடையில் குறித்த சிறுமியின் பாட்டி உட்பட இருவரை பொலிஸர் கைது செய்துள்ளனர். மேற்படி போதை பொருள் கடத்தல் தொடர்பாக பொலிஸார்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் இவர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்நேகநபர்கள் 38 மற்றும் 40 வயதினையுடையவர்கள். இவர்களிடமிருந்து 4 கிராம் 365 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த முச்சக்கரவண்டியும் கைப்பற்றபட்டுள்ளது.

இதேவேளை மினுவங்கொடையில் வர்த்தக ஒருவரின் மகனிடமிருந்து 1300 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

மற்றுமொரும் சம்பவம் மீன் விற்பனை செய்யும் போர்வையில் கஞ்சா விநியோகம் செய்துள்ளனர். 22லட்சம் பெறுமதியான போதை பொருட்களை கைப்பற்றி தனிநபர் ஒருவரையும் தம்பதியினரையும் கைது செய்து நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.

No comments:

Post a Comment