Friday, November 9, 2018

முரளிதரனை கோத்தபாய பாராட்டுகையில் அவன் ஒரு முட்டாள் என்கின்றார் மனோ கணேசன்.

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வு அவசியம் என தெரிவித்து வருகின்றனர் எனினும் அவ்வாறான தீர்வொன்று தேவையா என கேள்வி எழுப்பியிருந்தார் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன்.

லண்டன் பிபிசி யின் சிங்கள சேவைக்கு நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து பிரத்தியேகமாக வழங்கிய பேட்டியொன்றில் மேற்கண்ட கேள்வியை எழுப்பிய அவர், நாட்டின் பெரும்பான்மை மக்கள் அரசியல்வாதிகளிடம் கேட்பது ஜனநாயகத்தையோ அல்லது உரிமைகளையோ இல்லை, மூன்று வேளை உணவு உண்பதற்கும் தமது பிள்ளைகளிற்கு சிறந்த கல்வியை பெற்றுத்தருவதற்குமான பொருளாதார அபிவிருத்தியையுமே கேட்கின்றனர் என்றும் முத்தையா முரளீதரன் தெரிவித்திருந்தார்.

முத்தையா முரளிதரனின் மேற்படி கருத்து பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களை உருவாக்கியுள்ள நிலையில், „முரளீதரன் நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றீர்கள்" என கோத்தபாய ராஜபக்ச தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல்தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் விதத்தில் முரளீதரனின் கருத்து அமைந்துள்ளது எனவும் கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், மூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் குறித்த கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.

'மூன்று வேளை சாப்பாடு' என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும்.

No comments:

Post a Comment