Wednesday, November 7, 2018

முவர் பதவியேற்றனர்.

மேலும் இரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்னவும் பங்குபற்றியிருந்தார்.

1. சமல் ராஜபக்ஷ - சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்
2. எஸ். பி. திஸாநாயக்க - நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர்
3. பவித்ரா வன்னியாரச்சி - பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்


இதேநேரம் ஜனாதிபதி பணிக்குழுவின் புதிய பிரதானியாக எச்.எம்.பி. ஹிட்டிசேகர ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தரான அவர், இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.







No comments:

Post a Comment