Friday, November 9, 2018

ரணிலை எவ்வாறு நியமித்தாரோ அவ்வாறே மஹிந்தவையும் நியமித்துள்ளாராம். டியு

2015ம் ஆண்டின் ஜனாதிபதியும் இவ்வாறே ரணில் விக்கிரமசிங்க அவர்களை நியமித்தார். அது போலவே இன்றைய ஜனாதிபதியும் அவ்வாறான செயற்பட்டையே மேற்கொண்டார் என இலங்கை கம்யூனிஷ் கட்சியின் பொதுச் செயலாளர் டி. யு. குணவர்தன தெரிவிததார்.

அன்று விவசாயி ஒருவரின் மகனான திமு. ஜயரத்ன அவர்களை அநீதியான முறையில் பதவி நீக்கும்போது அமைதி காத்த அனைவரும், இப்பொழுது கொந்தளிக்கின்றனர். அவர் கொன்சர்வேட்டிவ் உறுப்பினர் என்றதினலேய என்ற கேள்வியோடு இங்கு நிலவுவது வர்க்க முரண்பாடே எனக் கூறினார்.

19வது அரசியல் யாப்பு திருத்தத்தின் பிரகாரம் ஒரே நேரத்தில் இருவர் பதவி நியமனம் ஆனது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் படி உள்ளது எனவும் அதற்கு சவால் விடுக்க முயாது என அவர் தெரிவிததார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :
நம்பிக்கையிலா பிரேரனை கொண்டு வந்திருந்தால் ரணில் அன்றைய தினமே பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார். ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரம் பிரதமர்{க்கு இல்லை. அவர் மந்திமார்களுள் ஒருவர் மட்டுமே. இங்கு சிந்திக்க வேண்டியது என்னவென்றால் ரணில் விக்கிரம சிங்க இன்னும் உயர் நீதிமன்றத்திற்கு செல்லாதது ஏன் ? என்பதாகும்.

ஜே.ஆர் ஜயவர்தன தொடக்கம் மஹிந்த வரை எல்லா ஜனாதிபதியும் செய்த விடயங்களை தற்போதைய ஜனாதிபதி செய்ய மாட்டார் என நாம் நிச்சயமாக கூறமுடியாது.

மொலமூரே முதல் கருஜயசூரிய வரை இருந்த சபாநாயகர்களில் அநுர பண்டாரநாயக்க அவர்களுக்கு காணப்பட்ட தற்துணிவு யாருக்கும் இது வரை இல்லை எனக்கூறினார்.

No comments:

Post a Comment