Monday, November 5, 2018

புலிகளின் தளபதி ஒருவரின் தந்தையை நிர்வாணமாக்கி நடக்கவிட்டவராம் சிவசக்தி ஆனந்தன். சொல்றார் சிறிதரன்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஸ் அணியின்) பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். இவர் அண்மையில் மஹிந்த பக்கம் தாவுகின்றார் என தமிழ் ஊடகங்கள் புரளி கிளப்பி விட்டிருந்தது.
அதேநேரம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலன் மற்றும் சரவணபவான் ஆகியோரும் அரசுடன் பணத்திற்காக இணையவுள்ளதாகவும் அதற்காக அவர்கள் வேண்டி நின்றவற்றையும் போட்டுடைத்திருந்தார் எம்பி ஆனந்தன்.

சிவசக்தி ஆனந்தனது மேற்படி கருத்தை மறுத்துரைத்துள்ள கிளிநொச்சி எம்பி சிறிதரன், சிவசக்தி ஆனந்தன் புலிகளின் தளபதி ஒருவரின் தந்தையை இந்தியாவில் தெருவொன்றில் நிர்வாணமாக நடக்கவிட்டவராம் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

இன்று பத்திரிகைகள், தொலைகாட்சிகள், ஊடகங்கள் எல்லாம் பல்வேறுபட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றது. இந்த மண்ணிலே இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர், வவுனியாவில் தன்னை முதன்முதல் கரும்புலியாக ஆகுதியாக்கிய மாப்பாணர் மகன் போர்க் அவர்களின் தாய் தந்தையர்களை தெருவிலே பிச்சை எடுக்கவைத்த பாராளுமன்றஉறுப்பினர், பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தந்தையை படுகொலை செய்து மலக்குளிக்குள் போட்ட அந்தபாராளுமன்ற உறுப்பினர், ஈரோஸ் போராளிகள் 13 பேரை இந்த வுனியாவில் வைத்து உமியுடன் கொளுத்திய அந்த பாராளுமன்ற உறுப்பினர், மூத்த போராளி அமுதனின் தந்தையை இந்தியாவில் வைத்து நிர்வாணமாக்கி நடக்க வைத்த அந்தபாராளுமன்ற உறுப்பினர் கூறியிருக்கிறார் சாள்ஸ், சிறிதரன், சரணவணபவன் போன்றோர் மகிந்தவிற்கு ஆதரவளிக்க போகின்றனர் என்று.

இந்திய ராணுவம் வந்தபோது அவர்களோடு நின்றுபல படுகொலைகளை செய்தீர்கள், இலங்கை ரானுவத்துடன் ஒட்டுக்குழுவாக இருந்து உங்களை வளர்த்துகொண்டவர்கள் என்றார் சிறிதரன்:

எது எவ்வாறாயினும், சிறிதரன் மீதும் இவ்வாறான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகளின் விமானப்பிரிவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை சிறிதரன், கோத்தபாயவிற்கு மாட்டிவிட்டதாக புலிகள் தரப்பு குற்றஞ்சுமத்துகின்றது.

அதேநேரம், சிறிதரன் கிளிநொச்சியில் பாடசாலை அதிபராக இருந்தபோது, புலிகளின் வலுக்கட்டாய ஆட்சேர்ப்புக்கு துணைபுரிந்தாக ஐ.நா குற்றஞ்சுமத்தியுள்ளது.

No comments:

Post a Comment