Sunday, November 25, 2018

புலனாய்வுப் பிரிவு உருவாக்கிய போலிப் புலிகள் அமைப்பு. போட்டுடைக்கின்றார் விமல் வீரவன்ச

புனர்வாழ்விலிருந்து வெளியேறிய புலி உறுப்பினர்களை கொண்டு புலனாய்வுப் பிரிவினர் ஒரு போலிப் புலிகள் அமைப்பை உருவாக்கினர் என்றும் அவ்வாறு அவர்கள் அவ்வமைப்பை உருவாக்கியதன் நோக்கம் தொடர்ந்தும் புலிக்காச்சல் இருக்கின்றவர்களை அடையாளம் கண்டு கொள்வதாகும் என்றும் களனிப்பிரதேசத்தில் விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்துள்ளார் விமல்வீரவன்ச-

தொடர்ந்து அங்கு அவர் கூறுகையில்:

அவ்வாறு செயற்பட்டதன் ஊடாக புலிகள் மீண்டும் சக்திபெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை இனம் கண்டு கொண்டார்கள். அவ்வாறே புலம்பெயர் தேசத்தலிருந்து கொண்டு இங்கு புலிகளமைப்பை உருவாக்க நினைக்கின்றவர்களையும் இனம் கண்டு கொண்டார்கள்.

இருந்தபோதும், புதிய நடைமுறைகளின் நிமித்தம் இராணுவத்தினருக்கு கைது செய்யும் அதிகாரம் தற்போது இல்லை. எனவே அவர்கள் பாதுகாப்பு சபைக்கு இந்த விடயத்தை தெரியப்படுத்தினார்கள். பாதுகாப்பு சபை இவ்விடயத்தை பங்கரவாத ஒழிப்பு பிரிவின் இயக்குனர் நாலக டி சில்வாவிற்கு தெரியப்படுத்தினர்.

அவ்விடயம் நாலக டி சில்வாவிற்கு வழங்கப்பட்டு ஒரு வாரத்தில் இவ்விடயத்தினை மேற்கொண்டிருந்த புலனாய்வு அதிகாரிகளின் பெயர் விபரம் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

No comments:

Post a Comment