Thursday, November 1, 2018

5 ம் திகதி பாராளுமன்று கூடுகின்றது.

இம் மாதம் 16 திகதிவரை வர்தமானி அறிவித்தலின் பிரகாரம் பிற்போடப்பட்டிருந்த பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் 05 திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மாணித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக்தில் இன்றைய தினம் இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எனினும் நாடாளுமன்றை முன்கூட்டியே கூட்ட வேண்டுமென நேற்று சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்தபோது கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கமைவாக எதிர்வரும் 05 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது.

No comments:

Post a Comment