Monday, November 26, 2018

1000 ரூபா கோரிய மனித சங்கிலி போரட்டம் வெற்றியாம்! கூறுகின்றார் ஆறுமுகன் தொண்டமான் .

மலையக பெருந்தோட்ட மக்கள் அடிப்படை சம்பளமாக 1000 வழங்குமாறு கோரி மலையகம் முழுவதும் முன்னெடுத்துவந்த மனித சங்கிலி போராட்டமானது வெற்றியளித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் மலைநாட்டு புதியகிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

26.11.2018. இன்று காலை மலைகபகுதிகளில் தோட்ட தொழிலாளர்களால் முன்னெடுக்கபட்டுவரும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதிகளுக்கு சென்ற அவர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் :

இப்போராட்டம் கம்பணி காரர்களுக்குக்கும் அரசிற்கும் பெரும் அழுத்தம் கொடுப்பதாக அமைந்திருந்தது.

இப்போராட்டத்தின் நிமிர்த்தமே இன்று அரசு என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. அப்பேச்சுவார்த்தையில் உரிய பதில் கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்பதை நான் அவர்களுக்கு தெரியப்படுத்துவேன்.


(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

No comments:

Post a Comment