Tuesday, October 23, 2018

JVP அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதாயின் தமது தலைமைக் காரியாலயத்தின் முன்னேயே செய்ய வேண்டும். கம்பன்பில

ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணி அரசின் பல்வேறு செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று கொழும்பில் மேற்கொண்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாயின் மக்கள் விடுதலை முன்னணி உறுபினர்கள் யாவரும் அவர்களது தலைமை காரியாலயத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடலாம் என கம்பன்பில கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார.

தொடர்ந்து அவர் கூறுகையில் : அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி உறுபினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த் கொழும்பிற்கு வருவதாக கூறுகின்றனர். தற்போதைய அரசாங்கம் 2015 ஜனவரி 8 ஆட்சிக்கு வந்தததாலே நாட்டை சீர்குலைத்தது. அதன் வெற்றிக்கு ம.வி.மு பாரிய ஒத்துழைப்பை நல்கியது என நான் கூறவில்லை, கட்சி தலைவர் அனுர குமார திசாநாயக்கவே கடந்த 2015 ஜனவரி 20 பாராளுமன்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளாரர்.

ஜனவரி மாதம் 8ஆம் திகதி இன் நாட்டின் மக்கள் பாரியதொரு வெற்றியை கண்டிருக்கிறார்கள். அவ் வெற்றிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளராக மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்திற்கு உள்ளே இருந்த சிலரும் வெளியில் இருந்த எம்மை போன்றவர்களினாழும் , த.தே.கூ உட்பட அனைவராலும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றது.

இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவந்தது நாங்களே என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் ஜனவரி 20 பறைசாற்றினார். அதே போல் இவ் அரசை தக்கவைத்து தேர்தலை பின்போடுவதும் ம.வி.முன்னனியே. அப்படியாயின் ம.வி.மு உறுப்பினர்கள் இந்த அரசாங்கத்தை எதிர்பானார்களானால் அவர்கள் செய்ய வேண்டிய, இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர பாடுப்பட்டு ஆட்சியை தக்கவைக்க நிபந்தனைகளற்ற ஒத்துழைப்பு வழங்கும் மக்கள் விடுதலை முன்னணி தலைமைக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் நடாத்த வேண்டும்.

No comments:

Post a Comment