Monday, October 29, 2018

மஹிந்த ராஜபக்ச கடமைகளை பொறுப்பெடுத்தார். கபினட் பேச்சாளர்கள் நியமனம்.

கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மஹிந்த ராஜபக்ச இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பாரமெடுத்துள்ளார்.

பிரதமர் காரியாலயத்தில் இந்நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது. அவர் நாட்டின் 22 வது பிரதம மந்திரியாக கடைமையை ஏற்றுள்ளார்.

இதேநேரம் புதிய அமைச்சரவையின் பேச்சாளர்களாக கெஹெலிய ரம்புக்வெல வும் மஹிந்த சமரசிங்க அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment