Monday, October 29, 2018

நான் எந்த அமைச்சையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. பா.உ டலஸ் அலகப்பெரும

புதிய அரசாங்கத்திற்கான அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், மாத்தறை மாவட்ட பாராளுமன்ற டலஸ் அலகப்பெரும தான் எந்த அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கைநெட் ற்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான முயற்சிகள் இடம்பெற்றபோது, நான் தெளிவாக மக்களுக்கு ஒரு செய்தியை கூறியிருந்தேன். அச்செய்தியானது அமையப்போகும் அமைச்சரவையில் நான் பங்கெடுக்கப்போவதில்லை என்பதாகும். அந்தவகையில் நான் மக்களுக்கு வழங்கிய செய்தியை அர்த்தமாக்கும் வகையிலும் பதவிகள் தேவைப்படுகின்றவர்களுக்கு வழிவிடும் வகையிலும் இம்முடிவுக்கு வந்துள்ளேன் என்றார் பா.உ டலஸ் அலகப்பெரும.

No comments:

Post a Comment